மருத்துவமுறையை மாற்றுங்கள்… டாக்டர்…

வாயைத்திற என்பீர்கள்! வயிறு தெரியும்படி வாய்திறப்போம்! நாக்கைநீட்டு என்பீர்கள்! கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்! முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள்! அப்போதுதான் உண்மையாய் சுவாசிப்போம்! அவ்வளவுதான்! அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்! வாசிக்கமுடியாத கையெழுத்தில் வாயில்வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள்! மூன்றுவேளை… என்னும் தேசியகீதத்தை இரண்டேவார்த்தையில் பாடி முடிப்பீர்கள்! போதாது டாக்டர்! எங்கள்தேவை இதில்லை டாக்டர்! நோயாளி, பாமரன்! சொல்லிக்கொடுங்கள்! நோயாளி, மாணவன்! கற்றுக்கொடுங்கள்! வாய்வழி சுவாசிக்காதே! காற்றை வடிகட்டும் ஏற்பாடு வாயிலில்லையென்று சொல்லுங்கள்! சுவாசிக்கவும் சூத்திரமுண்டு! எத்துணை பாமரர் இஃதறிவார்? சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று நுரையீரலின் தரைதொடவேண்டும்! […]
Continue reading »