மும்பையில், கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பெரிய அளவில் மழை

கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டி உள்ளது. நேற்று காலையில் இருந்து தற்போது வரை 283.4 மி.மீ., என்ற அளவில் மழை பொழிவு இருந்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டு, ஜுனில் 399 மி.மீ., மழைக்கு பின்னர் அதிகபட்சமாக இந்த ஆண்டு தான் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில நிர்வாகம் கூறி உள்ளது…