பாதியிலே கசந்து போச்சோ?

நாடகப்பாவையல்ல நான் நாளெல்லாம் மெருகாய்த்திரிய!
உந்தன் பார்வை மாறிப்போனால் என் தோற்றம் மாறிடுமோ?
புரிந்துகொண்டு வாழ எண்ணி புரிதலின்றி
போனதுமேன் ?
புதையல்ல நானுனக்கு தேடித்தேடி தொலைந்து போக!
திறந்து வைத்த புத்தகம் நான்
பாதியிலே கசந்து போச்சோ?