சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? – எப்படி தடுப்பது ?

ிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்…
10 அடிக்கு 10 அடி அறையில், கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 3 1/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின் அளவு குறைந்துவிடும்.
பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும். ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்…
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயு தேவை என்பதால் சிறுநீரகம் அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது…
அதாவது, நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது. (தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது. மேலும் அதிகபடியான ஆக்ஸிஜன் நீரில் கலந்தும் உள்ளது. )
எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட அத்தியாவசியமான வேலையை செய்ய ஆரம்பித்தவுடன், அதுவரை அது செய்து கொண்டிருக்கும் அதன் முக்கிய வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.
நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.
மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.
இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள் தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது.
மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது.
விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.
இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் பிசுபிசுப்பு தன்மை அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது.
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்.
இயற்கையான காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குங்கள்…
ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இயற்கையான காற்று, நீர், உணவு, மனம் ஆகியவற்றின் தூய்மையை காப்போம்…
உடல் மற்றும் மன ஆரோக்கியம் காப்போம்…
மனஅமைதி, பேரானந்தம் கொள்வோம்…
இதனை அடைந்து விட்டால்,
இந்த நாள் மட்டுமல்ல… அனைத்து நாட்களும் இனிய நாட்கள் தான்…
நலமுடன் வாழ்வதே, வளமான வாழ்க்கை…